கல்குடா கல்வி வலயத்தில் முதலாம் ஆண்டு மாணவா்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு



2019 ஆம் அண்டிற்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும்  மகோற்சவம் விழா இன்று மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்தில் இடம்பெற்றது.

இதன் ஒரு நிகழ்வாக பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் வித்தியாலய அதிபர் க.கதிர்காமநாதள் தலையில் புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு இடம்பெற்றது.

விசேட அதிதியாக கல்குடா வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் சி.துஸ்யந்தன் ஆசிரியை ஆலோசகர் திருமதி.சௌ.அருளேந்திரன்,பேத்தாழை விபுலானந்தா வித்தியாலய அதிபர் த.சந்திரலிங்கம் வாழைச்சேனை மக்கள் வங்கி கிளை முகாமையாளர் டி.தனசதாகரன், கல்குடா பொலிஸ் பதில் பொறுப்பதிகாரி. எஸ்.சுமதிபால,ஆகியோர்கள் அதிதிகளாக கலந்து கொண்டு மாணவர்களை ஆசீர்வதித்தினர்.

இதன்போது முதலாம் ஆண்டுக்கு இணைத்துக்கொள்ள விருக்கும் மாணவர்கள் சக மாணவர்களினால் மலர் கொத்து வழங்கி வரவேற்க்கப்ட்டனர்.மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றது. அத்துடன் புலமைப் பரிசில் பரீட்ச்சையில் சித்தியெய்திய மாணவர்களுக்கு வாழைச்சேனை மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி,மற்றும் ஹற்றன் நஷனல் வங்கிகளினால் விசேட பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்ட்டனர்.