கிழக்கு மாகாண ஆளுனர் நியமனத்திற்கு எதிராக ஹர்த்தால்





கிழக்கு மாகாண ஆளுனர் நியமனத்திற்கு எதிராக மட்டக்களப்பு , அம்பாறை மாவட்டத்தில் இன்று (11) காலை முதல் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களில் இயல்பு வாழ்க்கை செயலிழந்துள்ளதுடன் முஸ்லிம் பிரதேசங்களில் வழமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பாடசாலைகளில் மாணவர்கள் வரவுகள் குறைவாக காணப்பட்டுள்ளது .

வாழைச்சேனை கிண்ணையடி சந்தியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது


தனியார் மற்றும் அரச போக்குவரத்து சேவைகள் வழமைபோன்று நடைபெற்றுவரும் நிலையிலும் மக்கள் வரவு குறைவான நிலையிலேயே காணப்படுகின்றது.

எனினும் முஸ்லிம் பிரதேசங்களில் அனைத்து நடவடிக்கைகளும் வழமைபோன்று நடைபெற்றன.