அமைச்சர் சஜித் பிறந்த நாளில் -வீட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல்



(கதிரவன் )

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவு கன்னியா நடேசபுரத்தில் செமட செவன திட்டத்தின் கீழ் 25 வீடுகள் அமைக்கப்பட உள்ளது. சிவயோக சமாஜயத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் இதற்கான காணிகளை சிவயோகசமாஜம் பயனாளிகளுக்கு குத்தகைக்கு வழங்கி உள்ளது. வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிறேமதாசாவின் பிறந்த தினமான சனிக்கிழமை 2019.01.12 காலை 11.15 மணிக்கு இதற்கான அத்திவார கற்கள் நட்டு வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் சி.தண்டாயுதாணி. திருகோணமலை நகர சபை தலைவர் நா.இராசநாயகம், பட்டினமும் சூழலும் பிரதேச சபை தலைவர் மருத்துவர் ஈ.ஜி.ஞாகுணாளன், உப தலைவர் வைரவநாதன், தென்கைலை ஆதீன முதல்வர் சுவாமி ஸ்வஸ்தானந்தா, இலங்கை சின்மயா மிசன் மகிமா சைதன்யா அம்மையார், தேசிய வீடமைப்பு அதிகார சபை திருகோணமலை முகாமையாளர் திருக்குமார் ஆகியோர் வீடுகளுக்கான அடிக்கற்களை நட்டு வைத்தனர். திருகோணமலை பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம் கைலாசசங்கர் சர்மா ஆகம கிரியைகளை நடத்தி வைத்தார்.