மனநோயினால் வீதியில் அநாதரவாக திரிந்த இளைஞனுக்கு மறுவாழ்வு கொடுத்த கல்முனை மாநகர சபை உறுப்பினர்.






பாறுக் ஷிஹான்

அம்பாறை கல்முனை மாநகர பகுதியில் மனநலம் குன்றிய நிலையில் அலைந்து திரிந்த இளைஞனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் முயற்சியினால் கல்முனை ஆதார வைத்தியசாலையின் மனநோய்ப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.


கல்முனை பகுதி மக்களின் உதவியுடன் குறித்த மனநலம் குன்றிய இளைஞனை அணுகி அவரை தலைமுடி வெட்டி குளிப்பாட்டிய பின்னர் உணவு கொடுத்து மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் பின்னர் வைத்தியசாலையில் சேர்த்துள்ளார்.

குறித்த நபர் பெரியகல்லாறு பகுதியை சேர்ந்த கோபி என்பவர் எனத் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இந்த மனிதாபிமானப் பணியை செய்த உறுப்பினருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.