நோர்வே - ஓஸ்லோ மாநகரின் பிரதி முதல்வர் மட்டக்களப்பு மாநகர சபைக்கு விஜயம்

இலங்கைத் தீவில் மிகவும் அழகானதும், வரலாற்றுத் தொன்மை வாய்ந்ததுமான இந்த மட்டக்களப்பு மாநகரத்தை, எதிர்காலத்தில் சிறந்ததோர் மாநகரமாக்க அனைவரும் ஒன்றினைய வேண்டும். என நோர்வே நாடடின், ஓஸ்லோ மாநகரின் பிரதி முதல்வர் ஹம்சாயினி குணரெட்னம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகர சபைக்கு இன்று (09.01.2019) ஹம்சாயினி குணரெட்னம் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர், மாநகர சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் வரவேற்பளித்ததை தொடர்ந்து மாநகரசபை முதல்வருடன் சந்திப்பொன்றில் ஹம்சாயினி குணரெட்னம் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாநகர சபையில் தனது விஜயத்தினை குறிக்கும் வகையில் மரக்கன்று ஒன்றினையும் நட்டு வைத்தார். இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஹம்சாயினி குணரெட்னம் அவர்கள்.

இலங்கைத் தீவில் மிகவும் அழகானது இந்த மட்டக்களப்பு அதோடு சிறந்ததொரு வரலாற்றுத் தொன்மை வாய்ந்தது. எனவே எதிர்காலத்தில் சிறந்ததோர் மாநகரமாக அனைவரும் சேர்ந்து செயற்பட வேண்டும்.

மட்டக்களப்பு மாநகரசபையில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மிகவும் சிறந்த முறையில் காணப்படுகின்றது. அதனை மாநகர முதல்வர் திறமையாக செயற்படுத்திக் கொண்டிருக்கின்றார்.  அவருக்கு எமது வாழ்த்துக்கள். மேலும் இயற்கையினை பாதுகாக்கும் விடயத்தில் அதிக அவதானம் செலுத்த வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது.
ஆகையால் சிறந்த நகரமொன்றை உருவாக்க வேண்டுமென்றால், மட்டக்களப்பு மாநகரசபையினால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் போன்று சிறந்த திட்டங்களை வகுக்கவேண்டும், அதற்கு அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என தெரிவித்தார்.