திருக்கோவில் கல்வி வலய பாடசாலைகளில் தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு


திருக்கோவில் கல்வி வலய பாடசாலைகளில் தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது .
 திருக்கோவில் வலய கல்வி பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன் , பிரதிக்கல்வி பணிப்பாளர்கள் , உதவிகல்வி பணிப்பாளர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் அதிதிகளாக கலந்துகொண்டனர் .


இதன்போது முதலாம் ஆண்டுக்கு இணைத்துக்கொள்ள விருக்கும் மாணவர்கள் சக மாணவர்களினால் மலர் கொத்து வழங்கி வரவேற்கப்ட்டனர். 
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றது. 

தேசிய ரீதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை முதலாம் தரத்திற்கு இவ்வருடம் இணைக்கப்பட்ட மாணவ மாணவியருக்கு வரவேற்பு நிகழ்வுகள் நடைபெற்றன.