மட்டக்களப்பு தமிழர் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவருக்கு தொடர்ந்து 20 ம் திகதிவரை விளக்கமறியல்


நீலன்;

மட்டக்களப்பு தமிழர் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவரை எதிர்வரும் 20 ம் திகதிவரை விளக்கமறியளலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் நேற்று புதன்கிழமை (13) உத்தரவிட்டார்.

அண்மையில் காணிப் பிரச்சனை ஒன்றில் ஒருவரை தாக்கிய சம்பவ வீடியோ காட்சியை முகநூலில் பதிவு செய்தது தொடர்பாக மட்டு தமிழர் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கே. மோகன் மீது குற்றம் சுமத்தப்பட்டு பொலிசார் அவருக்கு எதிராக ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்தனர்.

இந்த நிலையில் தமிழர் உணர்வாளர் அமைப்பின் தலைவர் மீது நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட நிலையில் அவர் கடந்த 06 ம் திகதி புதன்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் சட்டத்தரணிகளுடன் நீதிமன்றில் ஆஜராகிய போது நீதவான் எதிர்வரும் 13 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் நேற்று மீண்டும் வழக்கை எடுத்த நீதவான் தொடர்ந்து 20 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார் .