ஒரு இலட்சம் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு தொழில் பயிற்சி.

இந்த வருட இறுதிக்கு முன்னர் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு தொழில் பயிற்சி வழங்கப்படும் என தேசிய தொழிற்பயிற்சி அதிகாரசபை தெரிவித்துள்ளது.


சாரதிகளின் சமூக பொருளாதார மற்றும் தொழில் மட்டத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. நுவரெலியா, மாத்தளை, பொலன்னறுவை, அம்பாறை, திருகோணமலை, வவுனியா ஆகிய மாவட்டங்களில் இந்த வேலைத்திட்;டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் 12 லட்சம் பேர் முச்சக்கரவண்டிகள் சாரதிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் சேவைக்காலம் எட்டு மணிநேரமாக காணப்படுகின்ற போதிலும்; ஆறு மணிநேரம் ஓய்வாகவே இருப்பதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. அதனை பிரயோசனப்படுத்திக் கொள்வதன் நோக்கிலேயே இந்த புதிய வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.