வின்சன்ட் மகளீர் உயர்தர தேசிய பாடசாலை மாணவிக்கு ஜனாதிபதியால் பதக்கம்


ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சுற்றாடல் வழிகாட்டி ஜனாதிபதி பதக்கம் வழங்கும் நிகழ்வில் மட்டக்களப்பு வின்சன்ட் மகளீர் உயர்தர தேசிய பாடசாலை மாணவி லக்ஷனா  ரஞ்ஜித்குமார்  பதக்கம் பெற்றுள்ளார்

எட்டாவது முறையாக இடம்பெறும் சுற்றாடல் வழிகாட்டி ஜனாதிபதி பதக்கம் வழங்கும் நிகழ்வில் 40 பாடசாலைகளை சேர்ந்த 93 சுற்றாடல் வழிகாட்டிகளுக்கு ஜனாதிபதி பதக்கங்கள் வழங்கப்பட்டன.

சுற்றாடல் பற்றிய அறிவை புத்தகங்களுடன் மட்டுப்படுத்தாது அவற்றை நடைமுறைக்கு கொண்டுவருவதற்கு பிள்ளைகளை பயிற்றுவிக்கும் இந்த நிகழ்ச்சித்திட்டம் இந்த வருடம் முதல் அனைத்து பாடசாலைகளிலும் செயற்திறனாக நடைமுறைப்படுத்தப்படுவதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டினார்.

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், மகாவலி சுற்றாடல்துறை பிரதி அமைச்சர் அஜித் மான்னப்பெரும, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் ஏ.ஜே.எம்.முசம்மில், பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஜயசிங்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.