காரைதீவில் பெண்ணிடம் பாலியல் சேட்டை செய்ய முயன்ற சாய்ந்தமருது இளைஞன் பொதுமக்களால் நையப்புடைப்பு



இன்று மாலை காரைதீவில் தனியாக சென்ற பெண்ணை பின்தொடர்ந்து பாலியல் சேட்டை முயன்றவேளை அவ்வீதியால் சென்ற

ஊர் இளைஞர்கள் ஒன்றுகூடி குறித்த நபரை மடக்கி பிடித்து அடித்ததில் பலத்த காயத்துடன் பொலிஸாரால் மீட்கப்பட்டு இளைஞர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
குறித்த நபர். சாய்ந்தமருதை சேர்ந்த 19  வயதுடைய இளைஞன் என தெரிய வருகிறது . 

இரவு நேரங்களில் கடைகளுக்கும்,பிரத்தியேக வகுப்புக்களுக்கும் செல்லும் பெண்கள் மாணவிகளை குறிவைத்து இவ்வாறான சம்பவங்கள் அம்பாறை மாவட்டத்தில் அரங்கேறி வருகின்றன. இதனால் இரவு வேளைகளில் வெளியில் செல்ல அச்சமடைகின்றனர்.