சிறிய ரக பார ஊர்தி - மோட்டார் சைக்கிள் விபத்து ! சம்பவ இடத்தில் ஒருவர் பலி

( நிதன் )
 சற்று முன்னர்   மட்டக்களப்பு,  தாழங்குடா  ( ஒல்லிக்குளம் ) மண்முனை பிரதான வீதி  வீதியில்  வடி சிறிய ரக வாகனமும்   மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில்  மோட்டார் சைக்கிள்  செலுத்தி வந்தவர்  சம்பவ இடத்திலயே உயிரிழந்துள்ளார் .

கொக்கட்டிச்சோலையை   சேர்ந்த 44 வயதுடைய  .எம். ஜெயக்குமார் என்பவரே  இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார் .

பிள்ளைகளின் படிப்பிற்காக கல்லடி , நாவற்குடாவில் வாசித்து வந்த இவர்  கொக்கட்டிச்சோலை நோக்கி சென்று கொண்டிருக்கும் போதே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது .

சடலம்  ஆரையம்பதி வைத்தியசாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது .
மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .