மட்டு மாவட்ட செயலக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய சங்காபிஷேக நிகழ்வு


(கல்லடி நிருபர் )
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பன்னெடுக் க் காலமாக வீற்றிருக்கும்  ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் கடந்த வருடம் 2017.02.03 திகதி நடைபெற்ற மஹா கும்பாபிசேகத்தின் இரண்டாவது சங்காபிஷேக நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட மாவட்ட செயலாளருமாகிய  மாணிக்கம் உதயகுமார் அவர்களது  தலைமையில் மாவட்ட செயலகத்தின் உயரதிகாரிகள் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் பங்குபற்றலுடன்  நாளை (11)  திங்கட்கிழமை வெகுவிமர்சையாக இடம்பெறவுள்ளது.

காலை 9.30 மணியளவில்  ஆலய பிரதம குரு சிவஸ்ரீ உ.ஜெகதீஸ்வர குருக்கள் அவர்களினால்  பூர்வாங்க கிரிகைகளுடன்  ஆரம்பமாகி , விநாயகப் பெருமானுக்கு 108 சங்குகளினால் சங்காபிஷேகம் இடம்பெற்று  அதனைத் தொடர்ந்து விசேட பூசை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது.

எனவே இந்நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு விநாயகப் பெருமானின் இறையருளை பெற்றுய்யுமாறு கேட்டுக்கொள்கின்றனர் ஆலய சங்காபிஷேக ஏற்பாட்டுக்குழுவினர்.