செங்கலடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மங்களகமவில் வீடமைப்புத் திட்டம்-




ரீ.எல்.ஜவ்பர்கான்-

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மங்களகமயில் வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜீத் பிரேமதாசவின் வழிகாட்டலில் ரணவிரு வீடமைப்பு கிராமம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

இதற்கான அடிக்கல் நடும் விழா இன்று(3.2.3019) காலை விவசாய நீர்ப்பாசன கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தலைமமையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு ஸ்ரீ மங்களா ராம விகாராதிபதி அம்பிட்டடி சுமணரத்ன தேரர் செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் சுனில் பண்டார உட்பட பலர் அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ரணவிரு வீடமைப்புத்திட்டத்தின்கீழ் 25 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது