துறைநீலாவணையில் கிராம சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வு




இ.சுதா

கிராம சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வு வியாழக்கிழமை துறைநீலாவணை பொது நூலக வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் சமுர்த்தி நிறைவேற்று முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்  சிறுவர் மகளிர் பிரிவு உத்தியோகத்தர்கள்  கிராம சேவை உத்தியோகத்தர்கள்  துறைநீலாவணைக் கிராமத்திலுள்ள கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் மாதர் அபிவிருத்திச் சங்கம்  கிராம சக்தி அமைப்பின் பிரதி நிதிகள்  பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது மாணவர்களின் நடன நிகழ்வு மற்றும் போதைப் பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு வீதி நாடகம் நடைபெற்றதுடன் நிகழ்வுகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.