நாடு முழுவதிலும் வெப்பநிலை அதிகரிக்கும் வாய்ப்பு



நாட்டின் பல பிரதேசங்களில், அதிக வெப்பநிலை நிலவுகின்ற நிலையில், எதிர்வரும் மாதத்தில், சுற்றுச்சூழலின் வெப்பநிலையும் அதிகரிக்குமென, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கொழும்பில் இன்றைய தினம், 34 பாகை செல்சியஸ் அளவு வெப்பநிலை நீடிக்குமென்றும் அநுராதபுரத்தில் 31 பாகை செல்சியஸ் வெப்பநிலை நீடிக்குமென்றும் எதிர்பார்க்கப்படுவதாக, திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், காலி, திருகோணமலை, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில், 30 பாகை செல்சிஸ் அளவில் வெப்பநிலை நீடிக்குமென்று, ​ வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது