மட்டக்களப்பு குட்செபட் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி



மட்டக்களப்பு குட்செபட் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியானது நேற்றைய தினம் இந்துக் கல்லூரி மைதானத்தில் கோலாகலமாக இடம்பெற்றது.

மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையிலும், அவர்களை மென்மேலும் ஊக்குவிக்கும் விதத்திலும் அமைந்த பல்வேறு போட்டி நிகழ்வுகள் ஒழுங்குமைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக பார்வையாளர்களின் கண்கவர் போட்டியாக விநோத உடைப் போட்டி இடம்பெற்றதோடு மாணவர்களது உடற் பயிற்சி கண்காட்சியானது அனைவரதும் பாராட்டினையும் பெற்றிருந்தது.

பாடசாலையின் அதிபரின் தலைமையில் இடம்பெற்ற இவ் விளையாட்டுப் போட்டியின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் அவர்கள் கலந்து கொண்டதோடு விசேட அதிதிகளாக திரு.திருமதி வேட்டோ ஜெயகுமார் ஆகியோரும் கலந்து கொண்டு போட்டி நிகழ்ச்சிகளில் பங்கு பற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், அணிகளுக்கும் கிண்ணங்களையும், சான்றிதல்களையும் வழங்கி வைத்தனர்.