நிலக்கடலை விதை அறுவடை விழா.




பா.மோகனதாஸ்

விதையுற்பத்தியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நிலக்கடலை விதை அறுவடை விழா, மாலையர்கட்டு மாதிரிக் கிராமத்தில் நேற்று (12) இடம்பெற்றது.

விவசாயத் திணைக்களத்தின் ஆலோசனையுடனான இந்நிகழ்வில், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் இ.ராகுலநாயகி பிரதம அதிதியாகவும் மட்டு மாவட்ட அபிவிருத்தி இணைக்குழுத் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான சோ.கணேசமூர்த்தி விசேட அதிதியாகவும் மட்டு பிரதி விவசாய பணிப்பாளர் வி.பேரின்பராசா, தெற்கு வலய உதவி விவசாய பணிப்பாளர் ரி.மேகராசா, மாலையர்கட்டு கிராம சேவகர் எம்.சத்தியநாராயணன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.

செய்கையாளர்கள் மற்றும் அதிதிகளினால் நிலக்கடலை அறுவடை செய்யப்பட்டதுடன் மாவட்டத்தில் பெருவாரியான விதையை பெற்றுக்கொடுப்பதற்கு சங்கம் ஆயத்தமாகவுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.