ஊருக்குள் நுழைந்த முதலை குட்டியை மக்கள் மடக்கி பிடிப்பு!

 

ஊருக்குள் நுழைந்த முதலை குட்டியை ஊர் மக்கள் மடக்கி பிடிக்கப்பட்ட சம்பவம் நேற்று  மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு அமிர்தகழி கிராம சேவையாளர் பிரிவில் மாணிக்கப்பிள்ளையார் வீதி பகுதியில் வீட்டு வளாகத்திற்குள் புகுந்த மூன்று அடி நீளமுள்ள முதலை குட்டி ஒன்றை அப்பகுதி மக்கள் பிடித்து வணஜீவராசி திணைக்கள உத்தியோகத்தர்களிடம் ஒப்படைத்துள்ளனர்

பொதுமக்களால் பிடிக்கப்பட்ட முதலைக்குட்டி தொடர்பாக மட்டக்களப்பு வணஜீவராசி திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட தகவலை தொடர்ந்து குறித்த இடத்திற்கு வருகைதந்த வணஜீவராசி திணைக்கள உத்தியோகத்தர்கள் முதலை குட்டியை பாதுகாப்பான முறையில் விடுவிப்பதற்கான கொண்டு சென்றுள்ளனர்