தேர்தல் ஆணையகத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!



தேர்தல் ஆணையகத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாகாண சபைத் தேர்தலை தாமதப்படுத்தும் செயற்பாடுகளில் தேர்தல்கள் ஆணைகுழு ஈடுபட்டுள்ளதாக தெரிவித்ததே குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டுள்ள இந்த மனுவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சட்டத்தரணி பிரேமநாத் டொலவத்த தாக்கல் செய்துள்ளார்.

சட்டத்தரணி பிரேமநாத் டொலவத்தயின் சத்தியகவேச கயோ அமைப்பால் மாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துமாறும் தேர்தல்கள் திணைக்களத்துக்கு அறிவுறுத்துமாறு வலியுறுத்தி குறித்த மனு உயர் நீதிமன்றில் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.