கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு புதிய தலைவர் தெரிவு



(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

சுமார் 40 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் (15) வெள்ளிக்கிழமை கல்முனை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

இவ் வருடாந்த பொதுக் கூட்டத்தின் போது நடப்பு வருடத்திற்கான நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது. இதில் கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி முகம்மட் ஷாரிக் காரியப்பர் ஏக மனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.

செயலாளராக சட்டத்தரணி எம்.ஏ. முபீத், பொருளாளராக சட்டத்தரணி என்.எம்.எம்.அஸாம் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.