இதன் கீழ் மட்டக்களப்பு எல்லைப்புற பாடசாலைகளை கல்வி பயிலும் வரிய மாணவர்களின் கற்றல் நடவடிக்கையினை மேம்படுத்தும் வகையில் மட்டக்களப்பு மாநகர சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அப்பியாச கொப்பிகள் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .
இதன் கீழ் மட்டக்களப்பு திராய்மடு தமிழ் பாடசாலை மற்றும் மட்டக்களப்பு திராய்மடு நாவலடி நாமகள் வித்தியாலய மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன .
ஆரம்ப நிகழ்வாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களினால் அதிதிகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டன .இதனை தொடர்ந்து அதிபர்களின் தலைமையுரையுடன் மாணவர்களுக்கான அப்பியாச கொப்பிகள் நிகழ்வு நடைபெற்றன
இந்நிகழ்வில் அதிதிகளாக மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் , பிரதி முதல்வர் கந்தசாமி சத்தியசீலன் ,மாநகர சபை உறுப்பினர்களான டி ஸ்ரீதரன் ,இரா அசோக் மற்றும் பாடசாலை மாணவர்கள் ,ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் .