ஜனாதிபதி இன்று மட்டக்களப்புக்கு விஜயம்!




ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மட்டக்களப்புக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

கிழக்கு மாகாண கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் செயற்குழுக் கூட்டம், ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ள குறித்த செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

மேலும், இக்கூட்டத்தில் பிரதேச மக்களின் முக்கிய பிரச்சினைகள் குறித்து அதிகம் கவனம் செலுத்தப்படவுள்ளதுடன் அதனை உடனடியாக தீர்ப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.

குறித்த நிகழ்வு மாகாணத்தின் அரசியல் பிரமுகர்கள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.