காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி




மட்டக்களப்பு காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிகள் இன்று நடைபெற்றது .

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை மாணவர்களின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிகள் பாடசாலை அதிபர் . அல்ஹாஜ் எம் சி எம் எ . சதார் தலைமையில் இன்று பிற்பகல் காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது

விளையாட்டு போட்டி நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுநர் அல்ஹாஜ் எம் எல் எ எம் .ஹிஸ்புல்லா .கலந்துகொண்டார்

ஆரம்ப நிகழ்வாக பாடசாலை மாணவர்களால் அதிதிகளுக்கு மலர் மாலை அணிவித்து பாண்டு வாத்தியம் இசைக்கப்பட்டு அழைத்துவரப்பட்டனர்

இந்நிகழ்வினை தொடர்ந்து தேசிய கொடி, பாடசாலை கொடி மற்றும் இல்லக்கொடிகள் ஏற்றப்பட்டு தேசிய கீதம்இசைக்கப்பட்டதுடன் விளையாட்டு நிகழ்வினை ஆரம்பிக்கும் முகமாக இல்ல மாணவ தலைவர்களால் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டு, மாணவ தலைவர்களின் சத்திய பிரமாண நிகழ்வு இடம்பெற்றது

இதனை தொடர்ந்து மாணவர்களின் இல்ல அணிவகுப்பு இடம்பெற்றது. விளையாட்டு நிகழ்வுகளில் சிறுவர்களின் வினோத விளையாட்டு நிகழ்வுகளும் பாடசாலை மாணவர்கள் ,உடற்பயிற்சி நிகழ்வுகளும் இடம்பெற்றது,

இறுதி நிகழ்வாக 2019ஆம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும், சான்றிதழ்களும்,வெற்றி கிண்ணங்களும் வழங்கப்பட்டு விளையாட்டு நிகழ்ச்சிகள் சிறப்பாக நிறைவு பெற்றது.

இந்நிகழ்வில் கிழக்குமாகாண கல்விப்பணிப்பாளர் , எம் டி எம் . நிசாம் , மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப் பணிப்பாளர் ,அல்ஹாஜ் எஸ் எம் எம் எஸ் .உமர் மௌலானா மற்றும் காத்தான்குடி நகரசபை தாவிசாளர் அல்ஹாஜ் எஸ் எச் .எம் . அஸ்பர் மற்றும் பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ,பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் ,பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்