கணித கண்காட்சியில் மடக்கை மலரும் இறுவெட்டும் வெளியீடு



பா.மோகனதாஸ்

சம்மாந்துறை மத்திய மகாவித்தியாலயத்தின் கணித கழகத்தின் ஏற்பாட்டில் கணித கண்காட்சி, இறுவெட்டு மற்றும் மடக்கை மலர் வெளியீடு என்பன பாடசாலையின் முதல்வர் ஏ.சீ.ஏ.மொஹமட் இஸ்மாயில் தலைமையில் (17) இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை கல்வியியல் கல்லூரியின் பீடாதிபதி எம்.ஐ.எம்.நவாஸ் பிரதம அதிதியாகவும் சம்மாந்துறை வலய திட்டமிடல் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஜாபிர், கல்லூரியின் சிரேஸ்ட விரிவுரையாளர் கணேசரத்தினம் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.

கணித கண்காட்சி கூடத்தினை திறந்து வைத்து பார்வையிட்டதுடன் வரைபுகள் எனும் இறுவெட்டினையும் மடக்கை எனும் மலரினையும் கல்வியியல் கல்லூரி கட்டுறு பயிலுனரிடமிருந்து பிரதம அதிதி பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் இதன்போது கலந்துகொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.