கல்லடி கடற்கரை பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கல்லடி திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் கல்லடி வேலூர் 8 குறுக்கு வீதி பகுதியை ஜேசுதாஸ் ராமநாதன் ( வயது 50 ) ஒரு பிள்ளையின் தந்தையையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .


குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக இவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர் .

இவரது மரணம் தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு மாவட்ட குற்றதடவியல் பொலிஸ் குழுவினரும் , மட்டக்களப்பு காத்தான்குடி பொலிசாரும் மேற்கொண்டு வருகின்றனர்