கடந்த வருடத்தில் பஸ் விபத்துக்களில் 239 பேர் உயிரிழப்பு

கடந்த வருடத்தில் வீதி ஒழுங்கு விதிகளுக்கு மாறாக பஸ்களை செலுத்தியதினால் ஏற்பட்ட விபத்துக்களில் 239 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பாக தகவல்களை வழங்கிய பொலிஸ் வாகன பிரிவு பொறுப்பதிகாரி பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகன விஷேடமாக இரவு நேரங்களில் பஸ்களை செலுத்தும் போது கூடுதலாக கவனங்களை செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.