செங்கலடி பிரதேசத்தில் ஒரு கோடி ரூபா நிதியில் நவீன மயப்படுத்தப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்தின் திறப்புவிழா

(ஏஎம் றிகாஸ்)
செங்கலடி பிரதேசத்தில் சுமார் ஒரு கோடி ரூபா நிதியில் நவீன மயப்படுத்தப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்தின் திறப்புவிழா வெகுசிறப்பாக நடைபெற்றது. வரையறுக்கப்பட்ட ஏறாவூர் வடக்கு மேற்கு பலநோக்குக் கூட்டுறவுச்சங்கத்திற்குச் சொந்தமான இந்த எரிபொருள் நிரப்பு நிலையம் எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் நிதியுதவியுடன் புனரமைப்புச் செய்யப்பட்டது.

கூட்டுறவுச்சங்கத்தலைவர் கே. சத்தியவரதன் தலைமையில் நடைபெற்ற இத்திறப்பு விழா நிகழ்வில் கூட்டுறவு அபிவிருத்தி மாவட்ட உதவி ஆணையாளர் கே.வி. தங்கவேல் உள்ளிட்ட கூட்டுத்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

சுமார் 47 வருடகாலமாக பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கிவந்த இந்த எரிபொருள் நிரப்பு நிலையம் தற்போது அடிப்படை வசதிகள் கொண்டதாக நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது