சுற்றுலா பயணிகளின் சேவைகளை அதிகரிக்கும் முகமாக விடுதி உரிமையாளர்கள் சங்கம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

(கதிரவன்  )
திருகோணமலையில் சுற்றுலா பயணிகளின் சேவைகளை அதிகரிக்கும் முகமாக விடுதி உரிமையாளர்கள் சங்கம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை 2019.02.19 மாலை மூன்றாவது மைல் கல்லில் அமைந்துள்ள மாக்கோசா பே விடுதியில் இது அங்குரர்ணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. 89 விடுதிகளின் உரிமையாளர்கள் இதில் அங்கத்தவர்களாக இணைந்து கொண்டுள்ளனர். அங்குராப்பண கூட்டத்தில் 52 உரிமையாளர்கள் கலந்து கொண்டார்கள்.


14 பேர் கொண்ட பணிப்பாளர் சபையும் தெரிவு செய்யப்பட்டது.
தலைவர் ரா.நித்திதரன், உபதலைவர் ந.திருப்பதிதுரை, செயலாளர் சந்தியா பிரியதர்சினி, பொருளாளர் க.நேமிநாதன்,
பொது தொடர்பு அலுவலகர் பா.புஸ்ராஜன்,
தொடர்பாடல் பணிப்பாளர் ஸ்ரீ.சக்தீபன், மற்றும் பணிப்பாளர்களாக க.ஜெயசீலன், பொ.சுகுசாந்தன், ஆ.ஜெயசீலன், மருத்துவர் ச.கோகுலன், ச.அருள்செல்வம், ரமேஷ். நிக்கொலஸ், ஆர்.எம்.ஏ.பண்டார மற்றும் கிண்ணியா பகுதிக்காக ஒருவர், இவர் பின்னர் தெரிவாவார்.