சுதந்திர தினத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த பெண் ஒருவர் கைது ! மதுபானம் மீட்பு


மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள் புன்னைச்சோலை பிரதேசத்தில் சட்டவிரோதமாக சுதந்திரதினத்தில் மதுபானம் விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவரை நேற்று (04) திங்கட்கிழமை கைது செய்ததுடன் அவரிடம் இருந்து 20 முழுப்போத்தல் மற்றும் 21 கால் போத்தல் மதுபானங்கள் மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
போலிஸ் புனலாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.எம்.டி. கீர்த்தா வத்துருவின் ஆலோசனைக்கமைய போதை ஓழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி சப் இன்பெக்டர் கரிதாஸ் தலைமையிலான பொலிஸ் குழுவினா சம்பவதினமான நேற்று இரவு குறித்த வீட்டை சுற்றிவளைத்து தேடுதலின் போது சட்டவிரோதமாக மதுபானம் விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் ஒருவரை கைது செய்தனர்

இவரிடமிருந்து 20 முழுப்போத்தல் மதுபானமும் 21 கால் போத்தல் மதுபானமும் மீட்கப்பட்டுள்ளது இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்