இலங்கை கணக்காளர் சேவை; 219 பேர் நியமனம்

இலங்கை கணக்காளர் சேவையின் மூன்றாம் தரத்திற்காக இவ்வருடத்தின் முதல் மூன்று மாத காலப் பகுதிக்குள் 219 பேருக்கு அரச சேவைகள் ஆணைக்குழுவினால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

2016ஆம், ஆண்டு இச்சேவைக்காக மட்டுப்படுத்தப்பட்ட, திறந்த போட்டிப் பரீட்சை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட இவர்களுள் 08 பேர் மாத்திரம் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

இலங்கை கணக்காளர் சேவையின் மூன்றாம் தரத்திற்காக திறந்த போட்டிப் பரீட்சை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டவர்களும் 05 பேர் நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுள் இரண்டு முஸ்லிம்களும், 03 தமிழர்களும் இடம்பெற்றிருந்தனர்.

இச்சேவையின் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை அடிப்படையில் வழங்கப்பட்ட நியமனத்தின் போது 03 தமிழர்களுக்கு மட்டும் நியமனம் வழங்கப்பட்டது.

அரச நியமனங்களின் போது இன விகிதாசாரம் பின்பற்றப்படக் கூடாது என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் போட்டிப் பரீட்சையில் காண்பிக்கப்படும் திறமை அடிப்படையிலேயே இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.