வாழைச்சேனை முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல் மற்றும் பிரதேசத்தின் 8 பள்ளிவாயல்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம்



மு.கோகிலன்

வாழைச்சேனை பிரதேச சபைக்கு உட்பட்ட அக்பர் பள்ளிவாயல் குறுக்கு வீதியில் கட்டப்படும் கட்டடத்தின் கட்டடவேலையை நிறுத்தக் கோரி வாழைச்சேனை முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல் மற்றும் பிரதேசத்தின் 8 பள்ளிவாயல்கள் இணைந்து இன்று வெள்ளிக்கிழமை (15) ஜூம்ஆ தொழுகையின் பின்னர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாழைச்சேனை முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாயலில் இருந்து ஆரம்பமான கண்டணப் பேரணியானது ஊர்வலமாக பிரதான சந்தை வீதியின் ஊடாக வாழைச்சேனை பிரதேச சபையினை வந்தடைந்தது.

'தவிசாளரே சட்டவிரோத கட்டடத்தை அகற்று.'ஊரின் ஒற்றுமையை குழப்பாதே,''கலாசார உத்தியோகஸ்த்தரே எங்கள் ஊரின் ஓற்றுமையை சீர்குலைக்காதே.'என்பன போன்ற வாசகங்கள் உள்ளடங்கிய பதாதைகளை கையில் ஏந்தியிருந்தனர்.இதன் பின்னர் தங்களது கோரிக்கையை அடங்கிய மகஜரை பிரதேச சபையின் தலைமை முகாமைத்துவ உத்தியோகஸ்த்தர் மற்றும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் வழங்கிய பின்னர் கலைந்து சென்றனர்.