விபத்தில் லொறிச் சாரதி உயிரிழப்பு

தம்பலகாமம் -கிண்ணியா பிரதான வீதி கோவிலடிப் பகுதியில் லொறியொன்று வீதியை விட்டு விலகிச்சென்று விபத்துக்குள்ளானதில், லொறியின் சாரதி உயிரிழந்துள்ளார்.

கந்தளாய் பகுதியிலிருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு பயணித்த லொறி,  கிண்ணியா ஊடாக மூதூர் பகுதிக்குச் சென்றுகொண்டிருந்தபோதே விபத்துக்குள்ளானது. குறித்த லொறியின் முன் டயரில் காற்றுப் போனதைத் தொடர்ந்து, வீதியை விட்டு விலகிச்சென்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மூதூர், ஆணைச்சேனை பகுதியைச் சேர்ந்த எஸ்.தேவசாயம் சத்தியசீலன் (55) எனும் சாரதியே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

சடலம் தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்துத் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன