அரச ஊழியர்களுக்கு உள்ளக விமான சேவை


அரச ஊழியர்களுக்கு உள்ளக விமான சேவை வசதியை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய அரச ஊழியர்கள் உள்ளக விமானம் மூலம் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, சிகிரியா, இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களுக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை இராஜாங்க அமைச்சர் அசோக்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

குறித்த வசதியை இலங்கையில் உள்ள அனைத்து அரச ஊழியர்களுக்கும் உள்ளக விமான பயண வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.