அறநெறி மாணவன் கெளரவிப்பு.




பா.மோகனதாஸ்

கருணைமலை பிள்ளையார் ஆலய அறங்காவலர் சபையின் ஏற்பாட்டில் தேசிய விருது வழங்கல் விழாவில் தேசிய மட்ட பேச்சுப் போட்டியில் இரண்டாம் இடத்தினைப் பெற்ற அறநெறி மாணவன் சு.ஜெனீஸ்ரனை பாராட்டிக் கெளரவிக்கும் நிகழ்வு ஆலய முன்றலில் நேற்று(17) இடம்பெற்றது.

ஆலய தலைவர் சா.வரதராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், போரதீவுப்பற்று பிரதேச சபை உறுப்பினர் சா.தியாகராஜா பிரதேச செயலக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ம.பிரகாஸ் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

பலாச்சோலை கருணைமலை பிள்ளையார் அறநெறியைச் சேர்ந்த சு.ஜெனீஸ்ரன், சபை உறுப்பினரால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.