தலைமைத் தபால் அலுவலகத்தின் சேவைக்காக ஆயிரம் தபால் அதிபர்கள் இணைத்துக் கொள்ள நடவடிக்கை


தலைமைத் தபால் அலுவலகத்தில் சேவைக்காக ஆயிரம் தபால் அதிபர்கள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர்.

கண்டி பொக்காவெல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் இந்த விடயத்தை குறிப்பிட்டார். வரவு செலவுத் திட்டம் நிறைவு பெற்ற பின்னர் இவர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்துள்ளார்.

போட்டிப் பரீட்சை மூலம் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் மேலும் தெரிவித்தார்.