கதிரவன்
திருகோணமலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம் 2019.03.11 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. நேற்று புதன்கிழமை 2019.03.20 தேர் திருவிழா நடைபெற்றது. பெருமளவிலான அடியவர்கள் இவ் உற்சவத்தில் கலந்து கொண்டு அங்கபிரதட்சணம் செய்து தமது நேர்த்திகளைத் தீர்த்துக் கொண்டனர்.