கிராம சேவையாளரின் சேவை நலனை பாராட்டி கௌரவிப்பு

 


கிராம சேவையாளரின் சேவை நலனை பாராட்டு நிகழ்வு இன்று மட்டக்களப்பு சின்ன ஊறணி கிராமத்தில் நடைபெற்றது

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு சின்ன ஊறணி கிராமத்தில் கிராம சேவையாளராக கடமையாற்றி இடமாற்றம் பெற்று செல்லும் கிராம சேவையாளர் எல் நதீசன் சேவையினை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு சின்ன ஊறணி கிராம அபிவிருத்தி சங்க கட்டிட நிலையத்தில் சின்ன ஊறணி கிராம சேவையாளர் பிரிவு பொதுமக்கள் மற்றும் , கிராமமட்ட அமைப்புக்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது .

கடந்த ஒரு தசாப்த காலம் கிராம சேவையாளர் சேவையில் சின்ன ஊறணி கிராம சேவை பிரிவில் கடமையாற்றி இடமாற்றம் பெற்று செல்லும் கிராம சேவையாளர் எல் நதீசன் பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

இதேவேளை புதிதாக கடமைகளை பொறுப்பேற்றுள்ள புதிய கிராம சேவையாளர் என் .அற்புதராஜாவை வரவேற்றும் மற்றும் நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்

இந்த பாராட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் , சிறப்பு விருந்தினர்களாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம் .தயாபரன் ,,மாநகர பிரதி முதல்வர் கே .சத்தியசீலன் ,சேவை நலன் பாராட்டை பெரும் கிராம சேவை உத்தியோகத்தர் எல் நதீசன் , வரவேற்பு பாராட்டினை பெரும் கிராம சேவை உத்தியோகத்தர் என் .அற்புதராஜா , கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் நிகழ்வில் சின்ன ஊறணி கிராம சேவையாளர் பிரிவு பொதுமக்கள் , கிராமமட்ட அமைப்புக்களின் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர் .