இந்த வருடத்தின் மூன்றாவது சுப்பர் மூன்



பௌர்ணமி தினமான இன்று வானில் சுப்பர் மூன் தென்படுமென இலங்கை வானியல் ஆய்வாளர் அனுர சீ பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்த நிலவு வழமையான பௌர்ணமி நிலவைக் காட்டிலும் ஆறு சதவீதம் பிரகாசமாக தென்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய இந்த நிலவை இன்றும் (புதன்கிழமை) நாளையும் ஐரோப்பிய நாடுகளில் உள்ளவர்களால் பார்வையிட முடியும் என தெரிவித்துள்ளார்.

எனினும் பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்துள்ள இலங்கை போன்ற நாடுகளுக்கு இந்த சுப்பர் மூன் தென்பாடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருடத்தில் தென்படவுள்ள மூன்றாவது சுப்பர் மூன் இது என்பது குறிப்பிடத்தக்கது.