பட்டிருப்பு வலயத்திற்குட்பட்ட கணேஷா வித்தியாலயத்தில் புதிய அதிபர் நியமனம்



மட்/பட்/தம்பலவத்தை கணேஷா வித்தியாலயத்திற்கு புதிதாக அதிபர் நியமிக்கப்பட்டார் .

மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிருப்பு வலயகல்வி வலயத்திற்குட்பட்ட மட்/பட்/தம்பலவத்தை கணேஷா வித்தியாலயத்தில் அதிபர் திரு.டில்லிநாதன் அவர்கள் இடமாற்றம் பெற்றுச்சென்று கடந்த 4மாத காலமாக இப்பாடசாலைக்கு அதிபர் இல்லாத நிலையில் பெரும் கஷ்ரத்தின் மத்தியில் பாடசாலையின் பிரதி அதிபரினால் நிருவாகம் நடாத்தப்பட்டு வந்தது. இதனையடுத்து பெற்றோர்கள்,பொதுமக்கள்,அமைப்புக்களின் வேண்டுகோளுக்கிணங்க 22.03.2019 இன்று புதிதாக  நேசராசா அவர்கள் அதிபராக நியமிக்கப்பட்டார்.

 அத்தோடு இவர் மண்டூர் 13 விக்னேஸ்வரா வித்தியாலயம் உட்பட பல பாடசாலைகளில் கடமையாற்றி பாடசாலைகளை உயர்மட்டத்திற்கு கொண்டுசென்று பல பாராட்டுக்களையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை வரவேற்கும் வைபவம் பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்டது. 

இதில் ஆசிரியர்கள்,மாணவர்கள், உதவி பிரதேச செயலாளர் செ.பார்த்தீபன், கமநல அபிவிருத்தி உத்தியோகஸ்தர் கோ.ஜெயகாந்தன் ,பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் இந்திரன், விளையாட்டு கழகம்,இளைஞர் கழகம் என்பன இணைந்து இவரை வரவேற்றார்கள்

(க.தனுசன்)