கரடியனாறு மகா வித்தியாலய அதிபர்,ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்



மட்/மமே/கரடியனாறு மகா வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள் இன்று 13/03/2019 புதன் கிழமை காலை 8.00 மணி அளவில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.நாடளாவிய ரீதியில் இடம்பெறும் இப் போராட்டத்தில் 3 பிரதான அம்சங்களை கொண்டுள்ள நிலையில் 

1. அதிபர் , ஆசிரியர்கள் சம்பளத்தை உயர்த்துதல்
2. ஆசிரியர்கள் மீது செலுத்தப்படும் தேவையற நெருக்கீடுகளை அகற்றுதல்
3 .மொத்த தேசிய உற்பத்தியில் கல்விக்காக 6% ஒதுக்குதல்

போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் கைகளில் கறுத்தப்பட்டி அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.