வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள 6 வெளிச்சவீடுகள் இவ்வருட இறுதிக்குள் புனரமைக்கப்படவுள்ளன.
விரைவில் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக துறைமுக மற்றும் கப்பற்துறை அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நான்காம் நாள் விவாதம் இன்று நாடாளுமன்றில் நடைபெற்றுவருகிறது. இவ்விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், முல்லைத்தீவு வெளிச்சவீடு முழுமையாக சேதமடைந்துள்ளது. இதனைப் புதிதாக நிர்மாணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அமைச்சர் சாகல ரத்னாயக்க மேலும் கூறினார்.