காய்ச்சலுக்கான அறிகுறி தென்படின் முதல் நாளே வைத்தியசாலையை நாடுமாறு அறிவுறுத்தல்!



கர்ப்பிணிகளோ அல்லது குழந்தைகளை பிரசவித்த தாய்மார்களோ காய்ச்சலுக்கான அறிகுறி தென்படின் முதல் நாளே வைத்தியசாலையை நாடுமாறு சுகாதார அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.

தற்போது நாடளாவிய ரீதியில் டெங்குக் காய்ச்சல் மற்றும் இன்புளுவன்சா வைரஸ் பரவி வருகின்றது. இந்நோய் தொற்றுக்கு கர்ப்பிணிகளும் குழந்தை பிரசவித்த தாய்மார்களும் இலகுவில் உள்ளாகக்கூடிய நிலைமை காணப்படுகின்றது. இதனாலேயே, இந்த ஆலோசனையை சுகாதார அமைச்சு வழங்கியுள்ளது.