கால அவகாசம் வழங்கப்படவில்லை ; தவறான கருத்துக்களை பரப்ப கூடாது ; ஜெனிவாவில் சுமந்திரன்!



ஜெனிவா பிரேரணையில் இலங்கை அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கை அரசாங்கம் மீதான இரண்டு வருட கால சர்வதேச மேற்பார்வை காலமே நீடிக்கப்பட்டுள்ளது எனவும் இதுவே ஜெனிவா பிரேரணை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர் இடம்பெற்றுவருகின்ற நிலையில் இன்று (திங்கட்கிழமை) இலங்கை தொடர்பான உப குழுக் கூட்டத்தில் உரையாற்றியமை குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

மேலும் கால அவகாசம் வழங்கப்பட்டமை என்பது தவறான விடயம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.