பெண்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் எழுகதிர் தையலகம் திறப்பு





 எழுகதிர் ஏழைகளின் வாழ்வின் உதயம் அமைப்பின் மூலம் பெண்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் முயற்சியின் ஒரு கட்டமாக எழுகதிர் தையலகம் திறப்பு நிகழ்வு இன்றைய தினம் மட்டக்களப்பு மத்திய வீதியில் திறந்து வைக்கப்பட்டது.

 இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர் அ.கிருரஜன், மாநகர ஆணையாளர் க.சித்திரவேல் உட்பட அதிதிகள் பலருடன் எழுகதிர் அமைப்பின் பிரதிநிதிகள், பிரதேச அமைப்புகளின் பிரதிநிதிகள், தையலக பணிப்பாளர் மற்றும் பயன்பெறுவோர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 எழுகதிர் அமைப்பின் தலைவர் சதா.தம்பிராஜா அவர்களின் முயற்சியின் பயனாக ஓம் சக்தி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம், ஆன்மீக குரு பங்காரு அம்மாவின் ஆசீர்வாதத்துடன் நடைமுறைப்படுத்தி வரும் லண்டன் ஓம் சக்தி அம்மா காப்பக அறக்கட்டளையின் நிதியுதவியின் மூலம் இத்தையலகம் உருவாக்கப்பட்டு இன்றைய தினம் அதிதிகளினால் திறந்து வைக்கப்பட்டது.