கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகத்தினால் சர்வதேச மகளிர் தினம்



மு.கோகிலன்

'திறமையான பெண் அழகான உலகினை படைக்கின்றாள்' என்ற தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தினம் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகத்தினால் ரெஜி கலாச்சார மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டது.

பிரதேச செயலாளர் சு.ராஜ்பாவு தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூபரஞ்சினி பிருந்தன்,கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் திருமதி ஷோபா ஜெயரஞ்சித்,சிறப்பு அதிதிகளாக தேசிய நிகழ்;ச்சிதிட்ட ஒருங்கிணைப்பாளர் ரி.மயூரன்,ஈ.யு.திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.பியந்த ஜெயகொடி,வேள்ட்விஷன் முகாமையாளர் திருமதி இந்துறோகாஸ்,காவியா பணிப்பாளர் திருமதி வை. அஜித்குமார்,எஸ்கோ நிறுவனப் பணிப்பாளர் எஸ்.ஸ்பிரிதியோன் மற்றும் எஸ்.கீதா,அகிம்சா சமூக நிறுவனத்தலைவர் திரு.வி.விஜயராஜா ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் சமூகத்தில் சாதனை படைத்த தவிசாளர் உட்பட மெலும் பல மகளிர் பொன்னாடை போர்த்தியும் நினைவுச் சின்னங்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.மற்றும் சமுதாய விழிப்புணர்வு நாடகங்களும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது