திருகோணமலையில் சடலம் மீட்பு



திருகோணமலை, பன்மதவாச்சி காட்டுப்பகுதியிலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று (20) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பன்குளம், பன்மதவாச்சியைச் சேர்ந்த முத்துலிங்கம் சிறிதர் (57) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பன்மதவாச்சி வயலை அண்மித்த காட்டுப்பகுதியில் மாடுகளை மேய்க்கச் சென்ற இருவர், சடலத்தையும் நிறுத்திவைக்கப்பட்ட முச்சக்கரவண்டியையும் அவதானித்துள்ளனர்.

இது தொடர்பாக மொரவெவ பொலிஸ் நிலையத்திற்கு அவர் வழங்கிய தகவலையடுத்து, பொலிஸார் குறித்த இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.