தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் அலுவலகம் திறந்தவைப்பு


தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் முன்னாள் கிழக்குமாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களது வழிநடத்தலின் பிரகாரம் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் அவர்களது ஒழுங்கமைப்பில்  கட்சியின் அலுவலகங்கள் திறக்கப்பட்டுவருகின்றன
இதன் பிரகாரம் முதல்கட்டமாக கே.கந்தராசா தலைமையில் கருவேப்பங்கேணியில் கட்சி அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது, திருமதி சுசிகலா அருள்தாஸ் தலைமையில் மட்டக்களப்பு ஞானசூரியம்  சதுக்கத்திலும்,  மோகன் தலைமையில் கல்லடித் தெருவிலும் திறந்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில்  அதிதிகளாக கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன், சமூகசேவகர் க.துரைநாயகம்,மகளீர் அணித் தலைவி செல்வி  உட்பட கட்சி அங்கத்தவர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அலுவலகத்தினைத்திறந்துவைத்தனர்
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சகல கிராமங்களிலும் கட்சி அலுவலகம் திறக்கப்பட்டு மங்களுக்கான சேவைகளை முன்னெடுக்க இருப்பதாக பொதுச்செயலாளர் தெரிவித்தார்