குண்டுவெடிப்பு சம்பவத்தில் காயமுற்றவர்களுக்கு அரசாங்க அதிபர் வேண்டுகோளின் பேரில் தலா 10ஆயிரம் ரூபா வீதம் பணஉதவி




(சிஹாராலத்தீப்)

மட்டக்களப்பு நகரின் குண்டுவெடிப்பு சம்பவத்தில் காயமுற்றவர்களின் குடும்ப செலவினங்களுக்கு நேற்று மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரின் வேண்டுகோளின்பேரில் தலா 10 ஆயிரம் ரூபா வீதம் பண உதவி தொகைகள் வழங்கப்பட்டன

இந்த நிதியுதவியினை சர்வோதயா அமைப்பு,மற்றும் ஏலயன்ஸ் நம்பிக்கை நிதியம் என்பனவங்க முன்வந்திருந்தன .மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்வைத்து அரசாங்கஅதிபர்உதயகுமார்இந்த அனர்த்த நிவாரண மத்திய நிலைய மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர். ஏ.எஸ்..எம்.சியாட் சர்வோதய அமைப்பின் கிழக்கு மாகாண இணைப்பாளர்.ஈ.எல்.ஏ.கரீம்,உட்பட பல அதிகாரிகளும் பிரசன்னமாகியிருந்தனர்,

அரசாங்க அதிபர்.உதயகுமார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் காயமுற்ற 6 3 பேரினது குடும்பங்களுக்கு உடனடி தேவைகளை பூர்த்தி செய்ய அவசர செலவாக பண உதவிவழங்கி உதவுமாறு தொண்டர் ஆர்வ நிறுவனங்களை கேட்டிருந்ததன்பயனாக இந்த பண உதவி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.