மத்திய விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நாவிதன்வெளி 15ம் கிராமத்தில் சித்திரைக் குதூகல நிகழ்வுகள் நாளை.


வ.யதுர்ஷன்(நாவிதன்வெளி)

மலர்ந்திருக்கும் தமிழ் சிங்கள புத்தாண்டை வரவேற்கும் வண்ணம் நாவிதன்வெளி 15ம் கிராமத்தில்  சித்திரைக் குதூகல நிகழ்வுகளை 15ம் கிராம மத்திய விளையாட்டுக் கழகத்தினர் பாமடி பொது விளையாட்டு மைதானத்தில் நாளை(20/04/2019) ஏற்பாடு செய்திருக்கின்றனர்.

அந்த வகையில் நாளை காலை மரதனோட்டம் போன்ற விளையாட்டுக்கள் இடம்பெற இருப்பதோடு மாலை 2 மணி முதல் இன்னும் பல  தமிழர் பாரம்பரிய விளையாட்டு நிகழ்சிகளையும் நடாத்த திட்டமிட்டுள்ளதோடு போட்டிகளில் பெற்றி பெறுவோருக்கு பெறுமதி வாய்ந்த பரிசில்களையும் வழங்கவுள்ளனர்.

நடைபெறவுள்ள இவ் சித்திரைக் குதூகல விளையாட்டு நிகழ்ச்சிகளில் பங்குபற்ற அனைவருக்கும் அழைப்பு விடுப்பதோடு நிகழ்ச்சிகளை கண்டு களிக்கவும் அனைவரையும் 15ம் கிராமம் மத்திய விளையாட்டுக் கழகத்தினர் அழைக்கின்றனர்.

நிகழ்ச்சிகள் யாவும் பி.ப 2 மணி முதல் Battinews இணையத்தளத்தினூடாகவும் Battinews பேஸ்புக் பக்கத்தினூடாகவும் நேரடியாக ஒளிபரப்பப்படும்.