24 மணித்தியாலயங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 245 பேர் கைது



நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் மது போதையில் வாகனம் செலுத்தியோரை கைது செய்யும் விசேட நடவடிக்கைகளின் போது 245 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையம் தெரிவித்துள்ளது.

நேற்று வியாழக்கிழமை முற்பகல் 6 மணி தொடக்கம் இன்று முற்பகல் 6 மணிக்கும் வரையான அதற்கிடைப்பட்ட காலப்பகுதியே இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் இடம் பெற்றுள்ளது.

இதன்போது 10170 போக்குவரத்து தொடர்பான வழக்குகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு நேற்று முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்யும் நடவடிக்கைகளுக்கு அமையவே இந்த கைது நடவடிக்கைகள் இடம் பெற்றுள்ளமை குறிப்பித்தக்கது.